வரம்பற்ற அதிகாரம் படைத்தவரா ஏஜி? நீதிமன்றம் தீர்மானிக்கட்டுமே

gobசட்ட  விவகார  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி,  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) அபாண்டி  அலியிடம்  அவரது  அதிகாரம்  வரம்பற்றதா  என்பதைத்  தீர்மானிக்கும்  பொறுப்பை  நீதிமன்றங்களிடம் விட்டுவிடுமாறு  ஆலோசனை கூற  வேண்டும்  என்கிறார்  டிஏபி  எம்பி  ஒருவர்.

“இந்த விவகாரத்தை  நீதிமன்றங்களிடம்  விட்டுவிட  வேண்டும்  என   ஏஜிக்கு  ஆலோசனை  கூறத்  தயாரா  என நன்சிக்கு  சவால் விடுக்கிறேன். அதன்வழி  இதற்கு  ஒரேயடியாக  முடிவு  கட்டி  விடலாம்”, என  பூச்சோங்  எம்பி  கோபிந்த்  சிங்  டியோ  கூறினார்.

கூட்டரசு  அரசமைப்பின்படி  ஏஜி வரம்பற்ற  அதிகாரம்  படைத்தவர்  என நாடாளுமன்றத்தில்  நன்சி  எழுத்துவழி பதில்  அளித்திருந்தார். அதற்கு  கோபிந்த்  சிங்கின்  எதிர்வினை  இது.