வசதி இருந்தால் கைப்பைகள், நகைகள் வைத்திருப்பதில் தவறில்லை என்கிறார் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மான்.
அந்த அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மாவைத் தற்காத்துப் பேசும்போது இவ்வாறு கூறினார்.
“ஒன்றிரண்டு பைகள் வைத்துக்கொள்ளலாம், ஏன் கூடாது? அவர் ஒரு பெண்மணி. பெண்களுக்குக் கைப்பைகள் என்றால் பிடிக்கும்.
“ஒரு பெண்ணை மனத்தைக் கவர கைப்பை உதவும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்”, என நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ரோஸ்மா அளவுக்குமீறி நகைகள் அணிய கண்டதில்லை என்றும் தாஜுடின் கூறினார்.


























நல்ல கிது ………மலேசியா நிலவரம்
…..பி ,,,பிஈ
//வசதி இருந்தால் கைப்பைகள், நகைகள் வைத்திருப்பதில் தவறில்லை//
உண்மைதான் ஆனால் அது நேர்மையான வழியில் வந்த பணத்தில் வாங்குவதே சிறப்பு, அன்றி அப்பாவிகளுக்கு சேரவேண்டிய கொஞ்ச நஞ்சத்தையும் கொள்ளையடித்து மாட்டிக்கொன்டால் அதிலென்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது.
உனக்கு ஒரு பெரிய பதவி காத்திருக்கிறது.வாழ்த்துக்கள்.
நான் பல முறை கூறுவது போல நன்கு படித்த,அறிவு மேலோங்க,சிந்தனை செயல் திறன் உள்ளவர்களை அமைச்சர் பொறுப்பு ஏற்க்க நல்ல பண்பு உள்ள வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம் , உழலை மறைக்கக்கூடிய இந்த மாதிரியான கர்வம் கொண்ட , படிப்பறிவு இல்லாத முட்டாள் இனத்தை தவிப்போம் .