மார்ச் 24-இல் தன் நாக்கு நுனியைத் துண்டித்துக் கொண்ட இரண்டாம் ஆண்டு மாணவன் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சி அவ்வாறு செய்யவில்லை என சிலாங்கூர் போலீஸ் தலைவர் அப்துல் சமா மாட் கூறினார்.
அம்மாணவன் கூர்மையான ஒரு பொருளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது தன் நாக்கை அவனே வெட்டிக்கொண்டான் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக அவர் சொன்னார்.
“இச்சம்பவம் வகுப்பறையில்தான் நடந்திருக்கிறது. அங்கு 34 மாணவர்களும் ஆசிரியை ஒருவரும் இருந்தனர்.அவன் கூறிக்கொண்டதைப்போல் முகமூடி அணிந்த ஐந்து மாணவர்கள் அவனை கழிப்பறைக்கு வலுக்கட்டாயமாக அவனை இழுத்துச் செல்லவில்லை”, என்றாரவர்.
இதுவரை நடந்துள்ள விசாரணைகளில் மாணவன் சொல்லும் கதைக்கு வலுவான ஆதாரம் இல்லை என அப்துல் சமா கூறினார்.


























தன் நாக்கை தானே துண்டித்து கொள்வதற்கு இவனுக்கு என்ன கிரிகா.நம்பித்தான் ஆகா வேண்டும்.
இதுதான் நமது மலேசியா போலிஸ் படையின் திறமை.. ஒரு கிரிமினல் சம்பவத்தை கூர்மையாக விசாரித்து, ஒரு கோமாளி கதையாக மாற்றி அந்த பள்ளிகூடத்தின் நற்பெயரை காப்பற்றி விட்டார்கள்.. நமது போலிஸ் படைக்கு ஒரு பெரிய கைதட்டு. இந்த
நாக்கு வெட்டப்பட்ட மாணவனுக்கு எனது அனுதாபம். ஏனென்றால் 34 மாணவர்களில் எவனும் சாட்சியாக வரமாட்டான்.. வகுப்பு ஆசிரியர் & தலைமை ஆசிரியர், தனது நற்பெயரை கைப்பற்றி கொள்ள வேண்டும். இந்நிலையில் .எப்படி இந்த மாணவனுக்கு வலுவான ஆதாரம் கிடைக்கும்… . .
எவ்வளவோ நம்பிட்டோம்.. இதை நம்ப மாட்டோமா ?
ஏதோ காத்து கருப்பு வேலையாகக் கூட இருக்கலாம்!
ஹா ஹா ஹா -வேறு என்ன ? இதுதான் நம்முடைய மிக திறமைசாலிகளான காவல்.
…………….போலிஸ் malaysia மஹா penipu NO 1
//இதுவரை நடந்துள்ள விசாரணைகளில் மாணவன் சொல்லும் கதைக்கு வலுவான ஆதாரம் இல்லை. //
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ரொம்பவும் நியாயமான விசாரணை வழங்கி இருக்கிறீர்கள், இதிலே சாட்சி ஒரு கேடு. போங்கடா போங்க, போயி நம்பிக்கை நாயகன் மனைவி கால்களுக்கு செருப்பு மாட்டி விடுங்க. (ஒருத்தி செருப்பு மாட்டிவிட்டதை காணொளியில் கண்டோமே. பாவம் சிறுவன், ஆழ்ந்த அனுதாபங்கள்.