கூட்டம் குறைந்திருந்தது பாஸின் பலத்தை உணர்த்தவில்லையா? கேட்கிறார் துவான் இப்ராகிம்

tuan ibமுந்தைய  பேரணிகளுடன்  ஒப்பிடும்போது  நேற்றைய  ஜிஎஸ்டி(பொருள், சேவை  வரி)- எதிர்ப்புப்  பேரணியில்  கூட்டம்  குறைவு  என்பது  பாஸின்  பலத்தைக்  காண்பிப்பதாக  அக்கட்சி  கூறியது.

“கூட்டத்தினர்  எண்ணிக்கை  என்று  பார்த்தால்  அது (பேரணி)  தோல்விதான். பாஸும்  அதில்  இணைந்திருந்தால்  கூட்டம்  இன்னும்  பெரிதாக  இருந்திருக்கும்”, என  பாஸ்  துணைத்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான்  இன்று  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

பக்கத்தான்  ஹராபான்  ஏற்பாட்டில்  நேற்று  கோலாலும்பூரில்  நடைபெற்ற  பேரணியில்  ஈராயிரத்துக்கும்  மேற்பட்டோர்  கலந்து  கொண்டனர். இந்தக்  கூட்டணியில்  பாஸ்  இடம்பெறவில்லை.