நஜிப் பதவி விலக இளைஞர்கள் கோரிக்கை

resignபணம்  பில்லியன்  கணக்கில்  அவருடைய  கணக்கில்  மாற்றிவிடப்பட்டதாக  செய்திகள்  வந்து  கொண்டிருப்பதால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலகுவதே  நல்லது  என   இளைஞர்  அமைப்புகள்  கோரிக்கை  விடுத்துள்ளன.

“நேர்மையையும்  பொறுப்புடைமையையும்  காட்டும்  வகையில்   நஜிப்  பதவி  விலக  வேண்டும்  என  விரும்புகிறோம்”, என  அவ்விளைஞர்கள்  ஓர்  அறிக்கையில்  கூறினர்.

நஜிப்பைப்  பதவி  விலக  வேண்டும்  என்ற கோரிக்கைக்கு  அனைத்து  எம்பிகளும்  ஆதரவளிக்க  வேண்டும்  என்றும்  அவர்கள்  வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையை  முன்வைத்த இளைஞர்  அமைப்புகளில்  கோலாலும்பூர்,  சிலாங்கூர்,  நெகிரி  செம்பிலான்,  மலாக்கா  சீன  அசெம்ப்ளி  மண்டப  இளைஞர்  அணியினர்,  மலாயாப்  பல்கலைக்கழகத்தின்  புதிய  இளைஞர்  சங்கம் (யுமெனி),  காபோங்கான் மஹாசிஸ்வா  யுகேஎம்,  மாணவர்  ஐக்கிய  முன்னணி  யுகேஎம்,  ஜோகூர்   யெல்லோ  பிளேம்,  கெராக்கான்  மகாசிஸ்வா  மாஜு  யுபிஎம்,  கூட்டரசு  பிரதேச   மற்றும்  சிலாங்கூர்  ஹொக்கியான்  சங்க  இளைஞர்  பிரிவு,   பெர்சத்துவான்  கொம்முனிடி   பிரிஹாதின்  சிலாங்கூர்,  கோலாலும்பூர்,   மலேசிய  இளைஞர்,  மாணவர்  ஜனநாயக  இயக்கம் (டெமா)  ஆகியவை  இடம்பெற்றுள்ளன.