மகாதிர்: தேர்தல் முறைப்படி நடந்தால் பிஎன் தோற்றுப்போகும்

mahaஅடுத்த  பொதுத்  தேர்தல்  முறைப்படி  நடத்தப்படுமானால்   பிரதமர்  அப்துல்  ரசாக்  தலைமையிலான  ஆளும்  கட்சி  தோற்றுப்போகலாம்  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார்.

“தேர்தல்  நியாயமாக,   வாக்குப் பெட்டிகளில்  தில்லுமுல்லு  போன்றவை   இல்லாமல்  நடத்தப்பட்டால் பிஎன்  தோற்கும்  என்றே  நினைக்கிறேன்”, என  மகாதிர்  கூறியதாக  சிங்கப்பூரின்  த  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  செய்தி  தெரிவிக்கிறது.