அதிகாரத்துவ இரகசிய சட்டத்துக்கு (ஓஎஸ்ஏ) உட்பட்ட ஆவணங்களை அம்பலப்படுத்தியற்காக சிறைத் தண்டனை விதிக்கப்படலாம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கலாம் என்று கூறப்பட்டாலும் அரசாங்க ஊழலை எதிர்க்கும் போராட்டத்தில் தாம் செய்ததுதான் சரி என்று பிடிவாதம் பிடிக்கிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி.
“இதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த ஒரு விசயத்தில் பெரும்பாலோருடன் என்னால் ஒத்துப்போக இயலாது. நான் எப்போதும் என் உள்ளுணர்வு சொல்வதைத்தான் செய்வேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பாண்டான் எம்பி ஓஎஸ்ஏ-இன் கீழ் மூன்று நாள் தடுப்புக் காவலில் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்திருக்கிறார்.
பலர், லெம்பாகா தாபோங் அங்காத்தான் தெந்திரா(எல்டிஏடி) மற்றும் 1எம்டிபி இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய அவரது செயலைப் பாராட்டினாலும் அதற்காக அவர் நாடாளுமன்ற பதவியை இழக்கும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ரபிஸி உள்ளே இருப்பதைவிட வெளியில் இருப்பதுதான் முக்கியம் என்பது அவரகளின் கருத்து.
ஆனால், ரபிஸி அதை ஒத்துக்கொள்ளவில்லை.
இப்படியெல்லாம் கணக்குப் பண்ணி நடந்து கொள்வது தவறு என்கிறார் அவர்.
வெளியே வந்து விட்டீர்களா! அப்போ நாடாளுமன்ற பதவிக்கு ஆப்பு தான்!
நீதி, நேர்மையோடு நடப்பவர்களுக்கும், மக்களுக்காக போராட நினைப்பவர்களுக்கும் தற்போதைய எதிர்கட்சிகளில் [குறிப்பாக டி.எ.பி.] சீட்டு கிடைக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த ரபிசிக்கு பி.கே.ஆர் கட்சி வாய்ப்பு தந்துள்ளது. Long live PKR .
ராபிசி உன் மலாய்க்கார இன வெறியாளர்களை மனிதாபிமானத்துடனும் அவன்களுக்கு மட்டும் இந்த மலேசியா இல்லை என்று தெளிவு படுத்து. நாட்டின் வளத்தை எல்லாம் உட்கார்ந்து கொண்டு அனுபவிப்பதினால் அல்தாந்துயா நாஜீபு பண்ணும் அநியாயத்தை எல்லாம் ஆதரித்து கொண்டிருகின்றனர்.
பரவாயில்லையே, சுயநலவாதிகளுக்கு மத்தியில் ஒரு பொதுநலவாதி. ரபிஸிக்கு நமது பாராட்டுக்கள்.
யாருக்கும் பதவி நிலையானதல்ல ! தவறுகளை தைரியமாக சுட்டிகாட்டுவது, அ நீதிக்கு எதிராக குரல் கொடுப்பது, இவகள்தான் ஒரு உண்மயான போராட்டவாதியின் அடையாளம்! வாழ்க ரபிசீ !!!