சிறையிலிருக்கும் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வயதாகி விட்டது என்பதால் அவரால் பிரதமராக முடியாது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“அவருக்கு வயதாகி விட்டது என்று நினைக்கிறேன்” என தி ஆஸ்திரேலியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் மகாதிர் கூறினார். ஆனால், உண்மையில் அன்வாருக்கு வயது 68தான்.
“70ஆம் வயதில் 80 வயதாகும்போது நான் பிரதமராக இருக்க முடியாது அதாவது விலகிக் கொள்வேன் என்பதை முன்கூட்டியே அறிவித்தேன். 80 ஆவதற்கு முன்பே விலகிக் கொண்டேன்”, என்று 91-வயதாகும் மகாதிர் கூறினார்.
ஆனால், “மக்கள் ஆதரவு இருந்தால் அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஏதுமில்லை”, என்றவர் குறிப்பிட்டார்.


























ஆமாம் அன்வாருக்கு வயதாகிவிட்டது, இவருக்கு இப்பத்தான் பதினைந்து முடிந்து பதினாறு நடக்கிறது ! 🙂
சரியா சொன்னிங்க மின்னல் இந்த மகாதிர்மாமா பேச்சை கேட்டு நம்மை முட்டாலாகியது போதும்!அன்வார் பிரதமர் ஆனால் முதல் பெரிய ஆப்பு மகாதிர்மாமாவுக்குதான்!!தமிழர்களை பாதாள குழியில் குழிதோண்டி புதைத்த பெருமை மகாதிர்மாமாவுக்கும் அவருடன் அமைச்சரவையில் இருந்த அவரது ஜால்ராக்களும் எல்லா வல்ல இறைவனிடமிருந்து தப்பவே முடியாது!அரசன் ஆண்டு கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்!!