ஜாகீரின் மகன் சொற்பொழிவுக்கு பினாங்கில் அனுமதி

fariசர்ச்சைக்குரிய  இஸ்லாமிய  ஆன்மிகப்  பேச்சாளர்  ஜாகீர்  நாயக்கின்  மகன்  பினாங்கில்  சொற்பொழிவாற்ற  அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.  பினாங்கு  துணை  முதலமைச்சர் I  முகம்மட்  ரஷிட்  ஹஸ்னோன்  இதைத்  தெரிவித்தார்.

ஜாகீரின்  மகன்  பாரிக்  நாயக்,  “இஸ்லாம்  பற்றிய  தப்பெண்ணங்கள்”  என்ற  தலைப்பில்  வெள்ளிக்கிழமை  இரவு  பென்யாயாங்  சமூக  மண்டபத்தில்  உரையாற்றுவார்.

பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்  தலைமையில்  நடந்த  மாநில  ஆட்சிமன்றக்  கூட்டத்தில்  அந்நிகழ்வுக்கு  அனுமதி  வழங்க  முடிவு  செய்யப்பட்டதாக  ரஷிட்  கூறினார். அக்கூட்டத்தில்  தாமும்  மாநிலத்தின்  இரண்டாம்  நிலை  துணை  முதல்வர்  பி.இராமசாமியும்  கலந்து  கொண்டதாக  அவர்  சொன்னார்.

அந்நிகழ்வுக்கு  இரண்டு  நிபந்தனைகளுடன்  அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. மற்ற  சமயங்களைத்  தொடக்   கூடாது,  சிறுமைப்படுத்தக்கூடாது, பேசப்போகும்  பொருள்  பற்றி  மாநில  போலீசுக்குத்  தெரியப்படுத்த  வேண்டும்.