ஸெட்டி: 2014-இலேயே கடன்களால் ஆபத்து என்று 1எம்டிபி-யை எச்சரித்தோம்

memoபேங்க்  நெகாரா  2014-இலேயே  1எம்டிபி-இடம்  பெருகிவரும்  அதன்  கடன்கள்  நாட்டின்  நிதியியல்  முறைக்கு  ஆபத்தாக  அமையும்  என  எச்சரித்திருக்கிறது.  இதை  அவ்வங்கியின்  ஆளுனர்  ஸெட்டி  அக்தார்  அசீஸ்  கூறினார்.

“எங்கள்  கணிப்பில்  அது  தெரியவந்தது”, என  ஸெட்டி  வாஷிங்டனில்  புளூம்பர்கிடம்  தெரிவித்தார்.

பெருகிவரும்  கடன்கள்  ஆபத்தாக  முடியலாம்  என்று  எச்சரித்து  நிதி  அமைச்சுக்கு  இரண்டு  நினைப்பூட்டும்  குறிப்புகளை   பேங்க்  நெகாரா   அனுப்பி  வைத்தது  என்றாரவர்.