1எம்டிபி புலனாய்வு: எப்போது முடியும் என்பதைச் சொல்ல இயலாது, ஐஜிபி

probe ijp1எம்டிபிமீது  போலீஸ்  மேற்கொண்டுள்ள  புலனாய்வு  எப்போது  முடிவடையும்  என்பதைச்  சொல்வதற்கில்லை  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“விசாரணைகள்  எப்போது  முடியும்  என்பதைச்  சொல்வது  கடினம்.

“இது  புது  விசாரணை  அல்ல. விசாரணையைத்  தொடர்கிறோம்,  அவ்வளவே”, என்றவர்  புக்கிட்  அமானில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

1எம்டிபி  மீதான  போலீஸ்  விசாரணை  எப்போது  முடிவடையும்  என்ற  கேள்விக்கு  அவர்  இவ்வாறு  விடையளித்தார்.

“முதலில்  எங்களை  விசாரிக்க  விடுங்கள். விசாரணை  முடிந்ததும் (விசாரணை அறிக்கையை) சட்டத்துறைத்  தலைவரிடம்  கொடுப்போம்.

“ஆனால், விசாரணையில்  கண்டறிந்தவற்றை  வெளியிட  மாட்டோம்”, என்றாரவர்.

தலைமைக்  கணக்காய்வாளர்  மற்றும்  பொதுக்கணக்குக்  குழு  அறிக்கைகளை  அடிப்படையாகக்  கொண்டு  போலீசார்   விரிவான  விசாரணை  மேற்கொள்வார்கள்  என  காலிட்  உறுதி  கூறினார்.