போலீஸ்: ஆலய சம்பவம் இன விவகாரம் அல்ல

inciநேற்று   ஈப்போவில்  ஒரு  கோயிலில்  இருந்த  சிலைகளை  உடைத்தவன்  மூளைக்  கோளாறு  உள்ள  ஓர்  ஆடவன்,  அதை  மக்கள்  இன  விவகாரமாகக்  கருதக்  கூடாது.

இவ்வாறு  அறிவுறுத்திய  ஈப்போ  போலீஸ்  தலைவர்  ஏசிபி  சும்  சாங்  கியோங்,  ஜாலான்  ஹோஸ்பிடலில்  அங்சானா  மாலுக்கு  எதிரில்  உள்ள  ஸ்ரீமுனீஸ்வரர்  அம்மன்  ஆலயத்தில்  ஒன்பது  தெய்வச்  சிலைகளை  அடித்து  நொறுக்கிய  29-வயது  ஆடவன்  மருத்துவச்  சோதனைக்கு  அனுப்பப்படுவான்  என   கூறினார்.

சிலைகளை  அடித்து  நொறுக்கிய  அவ்விளைஞன்  ஜாலான்  கசாலி  ஜாவியில்   போக்குவரத்துக்கு  எதிராக  தன்னுடைய  காரைச்  செலுத்தி  பஸ்  நிறுத்தம்  ஒன்றில்  மோதினான்.

அவனைப்  போலீஸ்  கைது  செய்தது.

-பெர்னாமா