பிகேஆர் தலைவர்கள் எதிர்வரும் சுங்கை புசார், கோலா கங்சார் இடைத்தேர்தல்களில் பிகேஆர் போட்டியிடுமா, மாட்டாதா என்று கூறத் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.
நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் கட்சியின் தலைமையகத்தில் அரசியல் விவகாரப் பிரிவின் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை முற்றுகையிட்டு வினவியதற்கு ஓர் அரசியல் கட்சி என்றால் அது தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கும் என்றார்.
“நாங்கள் தயராக இருக்கிறோம். நாங்கள் ஓர் அரசியல் கட்சி. இடைத் தேர்தல்களுக்கு நாங்கள் எப்பவும் தயார்”, என வான் அசிசா கூறினார்.


























தற்பொழுதுள்ள சூல்நிலையில் மக்கள் நீதி கட்சி போட்டிஇடுவதே சிறந்தது. பாஸ் கட்சியின் துரோகத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க வழி வகுக்கும். மேலும் பாஸ் போடியிடுவது மக்கள் விரும்பவில்லை. பாஸ் போடியிடுமானால் அது அம்னோவுக்கு சாதகமாகவே அமையும். தற்பொழுதுள்ள சேவை வறி மற்றும் நிரந்தரமற்ற பொருளாதார சூல்நிலைய மலேசியர்களை வெகுவாக பாதித்துள்ளது.
வாழ்வாதாரம் சுமையுடன் மக்களின் நிலைமை. இந்த நிலையில் மக்கள் நீதி கட்சிக்கு மக்கள் ஆதரவு கிட்டும்.