டிஏபி, அரசுப் பணத்தைக் கையாடிய சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினரைக் கட்சிநீக்கம் செய்தது

sackடிஏபி   தெலோக்  டத்தோ  சட்டமன்ற  உறுப்பினர்  லோ  சீ  ஹோங்,  தன்னுடைய  தொகுதிக்கு  ஒதுக்கப்பட்ட  அரசுப்  பணத்தைத்  தவறாக  பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால்  கட்சியிலிருந்து  விலக்கப்பட்டார்.

இதன்  தொடர்பில்   லோ  இன்று  காலை  விசாரிக்கப்பட்டதாகவும்  விசாரணைக்குப்  பின்னர் அவரைக்  கட்சியிலிருந்து நீக்கம்  செய்ய  முடிவெடுக்கப்பட்டதாகவும்  டிஏபி  ஒழுங்கு  நடவடிக்கைக்  குழுத்  தலைவர்  டான்  கொக்  வாய்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.