யுனிவர்சிடி டெக்னோலோஜி மலேசியா (யுடிஎம்)வின் பாடக் குறிப்பு விவகாரத்தில் போலீஸ் அப்பல்கலைக்கழகத்தின்மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்று மஇகா தலமைப் பொருளாளர் எஸ்.வேள்பாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
“சமய, இன உணர்வுகளை அவமதிப்போரைப் பொறுத்துக்கொள்வதற்கில்லை என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் பலதடவை எச்சரித்துள்ளார்.
“இந்துக்களினதும் சீக்கியர்களினதும் உணர்வுகள் எப்படிக் காலில்போட்டு மிதிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது அப்பட்டமான ஒர் எடுத்துக்காட்டு.
“இதற்குக் காரணமானவர்கள் மலேசியாவின் வருங்காலத் தலைமுறைகளை உருவாக்குபவர்கள் என்பதுதான் இன்னும் வேதனை அளிக்கும் விசயமாகும்”, என வேள்பாரி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பாடத் திட்டக் குறிப்பில் “தவறுகள்” நேர்ந்து விட்டதாக யுடிஎம் துணை வேந்தர் கூறுவதை ஏற்பதற்கில்லை.
பாடத்திட்டக் குறிப்பு பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பல்கலைக்கழகக் கல்வியாளர்களால் சரிப்பார்க்கப்பட்டதா அல்லது அங்கும் கவனக் குறைவு நிகழ்ந்து விட்டதா என்றும் அவர் வினவினார்.


























உங்கள் பங்குக்கு நீங்களும் சொல்லிவிட்டீர்கள்! இன்னும் கொஞ்சம் நாளைக்கு பத்திரிகைகள் அனைத்தும் அலறும்! ஆனால் அவர்களோ அவர்கள் பாட்டுக்கு அவர்கள் ‘வேலையைத்’ தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்! ஆக, கடைசியாக, ஆகப்போவது ஒன்றும் இல்லை!
BN-னின் தலைவரும் நாட்டின் பிரதமருமான நஜிப் தம்மீது யார் என்ன குற்றச்சாட்டை சுமத்தினாலும் காது கேளாளதுபோல் தனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அதுபோல BN-னின் கூட்டணி கட்சிகளும் BN-னின் தலைவரை பின்பற்ற வேண்டும் என்பது எழுத படாத சட்டமோ என்னவோ ?
இந்த மானங்கெட்ட ஜென்மங்களால் சமுதாயத்திற்கு என்றும் சாபக்கேடுதான். இந்த வரை இந்த நிலைமைதான் சமுதாயத்திற்கு. பலமுறை அவமதித்தும் அம்னோவிடமே சரணடைவது
மஇகா மற்றும் பிஎன் இந்திய உறுப்பு கட்சிகளின் அறிக்கை மன்னர்களின் அறிக்கை இனி அதிகம் எதிர்பார்க்கலாம்.பயந்தான்கொள்ளிகள்!தொடை நடுங்கிகள்!நாற்காலி சுகம் பறிபோய்விடும் என்ற பயம்!இந்தியன் என்ற உணர்வு இருந்திருந்தால்,இந்நேரம் வெகுண்டு எழுந்திருக்கவேண்டும் இல்லையே! நீங்கள் எல்லோரும் மகா உலக நடிகர்கள் என்று எலோருக்கும் நன்றாக தெரியும்.இதே ஒரு தமிழன் உங்கள் தலைவர்களை குறை கூறியிருந்தால்….உங்களுடைய வீரத்தை எங்களிடம்தானே காட்ட முடியும்!உங்களைஎல்லாம் நினைத்தால் அவமானமாய் இருக்கிறது.