கடன் தொகை செலுத்தப்படாததற்காக உத்தரவாதமளித்திருந்த நஜிப்பின் மகன்மீது சிஐஎம்பி வழக்கு

nazifபிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்கின்   மகன்  முகம்மட்  நஸிபுடின்  முகம்மட்  நஜிப்   ஒரு  நிறுவனம்  வாங்கிய  கடனுக்கு   உத்தரவாதமளித்திருந்தார்.  அந்த  நிறுவனம்  கடனைத்  திருப்பிச்  செலுத்தவில்லை  என்பதால்  கடனுக்கு  உத்தரவாதமளித்திருந்த  நஸிபிடின்மீது  சிஐஎம்பி   வழக்கு  தொடுத்துள்ளது.

வழக்கு  ஆகஸ்ட்  முதல்  நாள்  விசாரணைக்கு  வரும்  என  உயர்  நீதிமன்ற  நீதிபதி  அஹ்மட்  சைடி  இப்ராகிம்  கூறினார். அப்போது  அந்த  நிறுவனம்  கடன்  வாங்கிய  ரிம200,000-ஐ  நஸிபிடின்  செலுத்த  வேண்டுமா  என்பது  முடிவு  செய்யப்படும்.