பகாங் முப்திக்கு எதிராக வான் ஜி போலீசில் புகார்

reportடிஏபி-யை  ‘காஃபீர் ஹர்பி’  என்று  பிரகடனப்படுத்திய  பகாங்  முப்திக்கு  எதிராக   பிகேஆர்  இளைஞர்  தலைவர்  ஒருவர்  போலீசில்  புகார்  செய்துள்ளார்.

இன்று காலை  மணி  11.45க்கு  அப்புகாரைச்  செய்த  பிகேஆர்  இளைஞர்  சமயப்  பிரிவின்  தலைவர்  வான்  ஜி  உசேன்,  அது  போலீஸ்  விசாரணை  செய்ய  வேண்டிய  முக்கிய  விவகாரம்  என்றார்.

“முக்கியமான  விவகாரம்  என்பதால்தான்  போலீசில்  புகார்  செய்கிறோம்.  இரத்தம்  சிந்த  விடுக்கப்படும்  அறைகூவல்களைத்   தவிர்க்க   வேண்டும்  என்று   வலியுறுத்துகிறோம்”,  என்றாரவர்.

அண்மையில்  இஸ்லாமிய  பயங்கரவாதத்  தரப்பான  ஐஎஸ்  மிரட்டல்  விடுத்திருப்பதும்  இப்போது  முப்தியின்  இந்தப்  பிரகடனமும்  சேர்ந்து  கவலை  கொள்ள  வைப்பதாக   வான்  ஜி  கூறினார்.