நஜிப்பை இடி அமினுக்கு ஒப்பிட்ட மகாதிரிடம் போலீஸ் விசாரணை

idiபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்    உகாண்டா சர்வாதிகாரி   இடி அமினைப் போன்றவர்  என்று வருணித்த  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை   போலீசார் விசாரணை   செய்கிறார்கள்.

இதனை உறுதிப்படுத்திய மகாதிரின்   வழக்குரைஞர்    புத்ரா ஜெயாவில்    உள்ள பெர்டானா   தலைமைத்துவ   அறக்கட்டளை அலுவலகத்தில் விசாரணை  இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக்   கூறினார்.

1971-இலிருந்து 1979வரை   உகாண்டா  அதிபராக   கொடுங்கோல் ஆட்சி   புரிந்தவர் இடி அமின்.  அவரது ஆட்சியில்  மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன,   ஊழல்கள் மலிந்திருந்தன,  கொலைகள் சாதாரணமாக நடைபெற்றன.