1எம்டிபி தணிக்கை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஆட்சியாளர்கள் உத்தரவிட வேண்டும்: ஹுஸாம் கோரிக்கை

hmusaநேற்று  சரவாக்  ரிப்போர்ட்    அரசாங்கத்  தலைமைக்  கணக்காய்வாளரின்  1எம்டிபி  கணக்கு அறிக்கையை  வெட்ட  வெளிச்சமாக்கி  இருப்பதால்   பேரரசரும்  சுல்தான்களும் அவ்வறிக்கையை பாதுகாக்கும்  இரகசியக்  காப்புத்  தன்மையை  அகற்றி  அதைப்  பகிரங்கமாக  வெளியிட  உத்தரவிட  வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேரரசரும்  மாநில  சுல்தான்களும்  தலைமைக்  கணக்காய்வாளர்   அலுவலகம்  (1எம்டிபிமீது) ஒரு  விளக்கமளிப்பை  வழங்க  வேண்டும்  என்று  உத்தரவிட  வேண்டும்.  அந்த  அறிக்கையின்  பிரதி  ஒன்றுக்கும்  கோரிக்கை  விடுக்க  வேண்டும்.

அதன்  பின்னர்  அதிகாரத்துவ  இரகசிய  சட்டத்தின்  பாதுகாப்பை  அகற்றி  பொதுமக்களும்  அதைப்  படித்துப்  பார்க்க  வகை  செய்தல்  வேண்டும்  என  முன்னாள்  பாஸ்  உதவித்  தலைவர்   ஹுஸாம் மூசா  ஓர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டார்.