முகைதின்: உண்மையில், துரோகி யார்?

muh1எம்டிபி     மீதான   தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கையில்   உள்ளதை  வெளியில்     கசியவிட்டவர்களை   அமைச்சர்கள்     நம்பிக்கை  துரோகிகள்    என்று   முத்திரை  குத்தியிருப்பது   பற்றிக்  கருத்துரைத்த   பதவிநீக்கம்    செய்யப்பட்ட    முன்னாள்    துணைப்  பிரதமர்     முகைதின்    யாசின்    உண்மையிலேயே   யார்  துரோகிகள்  எனத்   தம்   முன்னாள்  சகாக்களிடம்    திருப்பிக்    கேட்டிருக்கிறார்.

1எம்டிபி-இல்  நிகழ்ந்துள்ள   முறைகேடுகளை   அம்பலப்படுத்தியவர்கள்   துரோகிகளா     அல்லது    1எம்டிபிவழி    நாட்டின்  பணத்தைச்  சுருட்டிக்கொண்டு    அந்த   முறைகேட்டை   மூடி  மறைக்கிறார்களே   அவர்கள்   துரோகிகளா  என்று   முகைதின்   வினவினார்.

“உண்மையில்,     நாட்டைக்   கொள்ளையடித்தவர்களும்    தங்களின்   அக்குற்றச்செயலை   மூடிமறைத்தவர்களுமே   துரோகிகளாவர்”,  என  முகைதின்   இன்று  ஓர்   அறிக்கையில்    கூறினார்.