கடந்த இரண்டு மாதங்களில் நான்கு ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து போலீஸ் அதன் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆலய உடைப்புச் சம்பவங்களை விசாரணை செய்வதற்கு பினாங்கு போலீஸ் துணைத் தலைவர் ஏ. தெய்வீகன் தலைமையில் சிறப்புப் பணிக் குழு அமைக்கப்பட்டிருப்பதைப் பாராட்டிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான், போலீசார் சம்பவங்கள்மீது விசாரணையை உடனடியாக தொடங்கி விட வேண்டும் என்றார்.
“இன்னொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது. அதுதான் என் கோரிக்கை. எல்லாரையும் நீண்ட காலத்துக்கு அடக்கி வைத்திருக்க முடியாது. இந்து சங்கம் என்ன செய்கிறது, மஇகா என்ன செய்கிறது என்று கேட்கிறார்கள்”, என மோகன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.


























சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு, பாரா பட்சம் பாராமல் நடவடிக்கையில் இறங்கவேண்டும் . நமது அமைப்புகள் ஒன்று சேர்ந்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதுடன் , இனி இவ்வாறு நடவாறு இருக்க உறுதி கூறவேண்டும் . மனநிலை சரியில்லை, நடவடிக்கை எடுக்க வயது தடங்கலாக உள்ளது, அவர் ஒரு மருத்துவர் என்று தலைமை பதிவில் உள்ள முட்டாள் ,அறிவில்லாத, இலஞ்சத்தின் இனம்போல பேசாமல் , நேர்மையான நடவடிக்கையில் இறங்க ஆவண செய்வோம் . நன்றி .
ம இ க என்ன செய்து கொண்டிருக்கிறது.ம இ க தமிழர்கள் கட்சி தானே ?
முதலில் அனைத்து கோவில்களில் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துங்கள். பெருமைக்கு மலேசியாவில் நிறைய கோவில். ஆனால நிறைய பேருக்கு தேவாரம் என்றலே என்ன வென்று தெரியவில்லை.
மக்கி இத்துப்போன கட்சி இன்னும் இருக்கா
1970 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல ஆலயங்களை, ஓர் குண்டர் கும்பல் சேதப்படுத்தி கொண்டிருந்தது. அந்த கும்பல் சிலாங்கூர் மாநிலத்தின் பத்தாங் காலி அருகே கெர்லிங் என்கிற ஊரில், ஆலய சிலைகளை சேதப்படுத்த உள்ளே புகுந்தது. புகுந்த அந்த கும்பல் அனைவரும் பிணமானார்கள். என்ன நடந்தது.?
எங்கய்யா தீவிர படுத்துவது…? தலைமறைவாகி போன தீவிரவாதி ரித்வான் அப்துல்லாவையே பிடிக்க முடிய வில்லை. போது மக்களை பிடித்துக் கொடுக்கும் படி அறிக்கை விடுகிறார்கள்.
ஐயா T SIVAINGAM அவர்கலே நாம் என்ன சொன்னாலும் எடுபடாது- அக்காலம் மலை ஏறி பல ஆண்டுகள் ஆகி விட்டது.