அம்னோவைப் பின்பற்றி கட்சித் தேர்தலைத் தாமதப்படுத்தாதீர்: டிஏபிக்கு அறிவுறுத்து

dontலிம்   குவான்  எங்   தொடர்ந்து    தலைமைச்  செயலாளராக   இருக்க   வேண்டும்  என்பதற்காக    டிஏபி  கட்சித்   தேர்தலைத்   தாமதப்படுத்தக்   கூடாது   என   இளைஞர்   அமைப்பான  சேலஞ்சர்   கூறியது.

கட்சித்   தேர்தல்களைத்  தள்ளிவைக்க   முடிவெடுக்கப்பட்டிருப்பதாக  டிஏபி  நேற்று    அறிவித்தது     “ஏமாற்றமளிப்பதாக”  அந்த   அமைப்பின்    தலைவர்   சைட்   சாதிக்   சைட்   அப்துல்   ரஹ்மான்   கூறினார்.

கடந்த   ஆண்டு   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கும்    இதே   போன்றுதான்   கட்சித்   தேர்தலைத்    தள்ளிப்போடுவதாக    அறிவித்தார்.  மகாதிர்,  பிரதமராக   இருந்தபோது    அவரும்   அதைத்தான்  செய்தார்   என  சைட்   சாதிக்    தெரிவித்தார்.