WSJ:அமெரிக்கா 1எம்டிபி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய தயாராகிறது

seizeஅமெரிக்க   நீதித்துறை   பில்லியன்  கணக்கான   டாலர்    மதிப்புள்ள  1எம்டிபி    சொத்துக்களைப்    பறிமுதல்   செய்யும்  என  எதிர்பார்க்கப்படுவதாக   த  வால்   ஸ்ட்ரிட்   ஜர்னல் (WSJ)  இன்று   அறிவித்திருந்தது.  இது   நடந்தால்  இதுவே   அமெரிக்க   வரலாற்றில்  மிகப்  பெரிய    சொத்துப்  பறிமுதலாக   விளங்கும்.

சொத்துக்களைப்  பறிமுதல்   செய்ய   அமெரிக்க  நீதித்துறை   சிவில்  வழக்குகளைத்    தொடுக்கும்   என   சில   வட்டாரங்களை   மேற்கோள்   காட்டி    அந்த  நாளேடு   தெரிவித்தது.

பறிமுதல்     செய்யப்படும்     சொத்துக்களில்  “மலேசிய  நிதி  நிறுவனத்திலிருந்து  கையாடப்பட்ட   பணத்தில்”   வாங்கப்பட்ட   சொத்துக்களும்  மற்றவையும்     உள்ளிட்டிருக்கும்   என    அது  கூறியது.