1எம்டிபி மீதான புலன் விசாரணை குறித்து டிஐஜிபி மெளனம்

digpபொதுக்  கணக்குக்குழுவின்    1எம்டிபி  மீதான    அறிக்கை   தொடர்பில்   போலீஸ்  மேற்கொண்டுள்ள   விசாரணைகள்   எந்த    அளவில்  உள்ளன  என்ற  கேள்விக்கு    போலீஸ்  படை த்   துணைத்   தலைவர்   நூர்   ரஷிட்    இப்ராகிமால்    பதில்   அளிக்க  இயலவில்லை.

அந்த  விவகாரம்   இன்ஸ்பெக்டர்   ஜெனரல்   அப்   போலீஸ் (ஐஜிபி)  காலிட்   அபு   பக்கார்   சம்பந்தப்பட்டது   என்றாரவர்.

“ஐஜிபி   அதைக்  கவனித்துக்  கொள்வதால்  என்னால்  பதிலளிக்க   இயலாது”,  என   நூர்  ரஷிட்   இன்று  புக்கிட்   அமான்    போலீஸ்   தலைமையகத்தில்   கூறினார்.

இதனிடையே,  மைவாட்ச்   தலைவர்   ஆர்.ஸ்ரீசஞ்சீவன்   போலீஸ்  காவலில்  இருந்தபோது   சித்திரவதைக்கு   உள்ளானதாகக்  கூறி   இருப்பது   பற்றி  வினவியதற்கு   அவ்விவகாரம்    நியாயமான  முறையில்  விசாரிக்கப்படும்   என்றார்.

“அவர்  போலீஸ்   புகார்  செய்ய  வாய்ப்பளிப்போம்.   சித்திரவதை    செய்யப்பட்டதாக    அவர்    நினைத்தால்    அது    பற்றி    அவர்   புகார்  செய்யலாம்.

“அவர்  புகார்   செய்தால்    அந்த   விவகாரம்   நியாயமான  முறையில்  விசாரிக்கப்படும்”,  என்றார்.