ஆய்வாளர்: திடீர் தேர்தலில் பிகேஆர் மலாய் தொகுதிகள் சிலவற்றை இழக்கலாம்

anyபினாங்கில்   திடீர்   தேர்தல்   நடந்தால்   பிகேஆரும்   எதிரணியும்   மலாய்  தொகுதிகள்  சிலவற்றை  இழக்கும்   அபாயம்   உள்ளது    என    எச்சரிக்கிறார்   அரசியல்  ஆய்வாளர்   ஒருவர்.

பாஸ்     விலகி    நின்று   எதிரணி   தொடர்ந்து   பிளவுபட்டுக்  கிடந்தால்   இதுதான்    நடக்கும்     என    தேசியப்   பல்கலைக்கழகப்   பேராசிரியர்    பைசால்   ஹஸிஸ்   கூறினார்.

“இப்போதைய   நிலவரம்   தொடருமானால்   மலாய்க்காரர்   தொகுதிகளில்    பல்முனை   போட்டி     நிலவும்.  அது  பக்கத்தானுக்கோ   எதிரணிக்கோ  நல்லதல்ல”,  என்றவர்  மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

ஆனால்,  மலாயாப்   பல்கலைக்கழகத்தின்   ஆவாங்   அஸ்மான்   ஆவாங்   பாவி   பைசலின்   கருத்தை   ஏற்கவில்லை.  திடீர்   தேர்தலில்  பிகேஆரின்  கை  மேலோங்கும்   என்றாரவர்.

டிஏபி   மீதான  அனுதாபம்   பிகேஆருக்குச்   சாதகமாக   அமையும்   என்பது    அவருடைய    கருத்து.

பிகேஆர்,  பாஸ்    ஆதரவாளர்களையும்    நம்பி  இருக்கலாம்.  பினாங்கு   பாஸ்    ஆதரவாளர்கள்  கெடா   அல்லது   கிளந்தான்   பாஸ்    ஆதரவாளர்களிலிருந்து   மாறுபட்டவர்கள்   என்று   குறிப்பிட்ட    அவர்,   அவர்களில்  பலருக்கு     பாஸ்    தலைவர்   அப்துல்  ஹாடி    ஆவாங்   அம்னோவுடன்    அணுக்கமாக    உறவாடுவது   பிடிக்கவில்லை    என்றார்.