நஜிப்: அமெரிக்க நீதித்துறை விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரையில் ஊகங்கள் செய்யாதீர்

 

Najibdon'tassume1எம்டிபி நிதியிலிருந்து களவாடல் நடந்திருப்பது குறித்து அமெரிக்க நீதித்துறை மேற்கொண்டிருக்கும் விசாரணை பற்றி ஊகங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தினார்.

சட்ட நடவடிக்கைகள் முழுமைபெறும் வரையில் நாம் எந்த ஊகங்களையும் செய்யாமல் இருப்பது விவேகமாகும் என்று அவர் இன்று மலாய் மெயில் ஓன்லைன் செய்திருந்த வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.

அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடுத்துள்ளவை சிவில் வழக்குகள், கிரிமினல் வழக்குகள் அல்ல. ஆகவே, இந்த வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், அவரது வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ் உட்பட, டிஒஜேயை நீதிமன்றத்தில் சந்திப்பர் என்று நஜிப் மேலும் கூறினார்.

“அவருக்கு (ரிஸாவுக்கு) உரிமைகள் உண்டு, சட்ட நடவைக்கைகள் எடுப்பதை அனுமதியுங்கள்…சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் வழி அவர்கள் தரப்பு பதிலை அமெரிக்காவில் கூறுவார்கள்”, என்று தெவித்தார்.