ஐஜிபி மட்டுமே 1எம்டிபி பற்றிக் கருத்துரைக்க முடியும், பணி ஓய்வு பெறும் சிசிஐடி தலைவர்

ccidஅமெரிக்க  நீதித்துறை   1எம்டிபி  தொடர்புடைய   சொத்துகளைப்  பறிமுதல்   செய்ய    தொடுத்துள்ள   சிவில்   வழக்குகள்   குறித்து    கருத்துரைக்கக்கூடிய   ஒரே   போலீஸ்    அதிகாரி   இன்ஸ்பெக்டர்-  ஜெனரல்   அப்  போலீஸ்   காலிட்  அபு   பக்கார்   மட்டுமே.

புக்கிட்   அமானில்,    பணிஓய்வு  பெறும்   வணிகக்  குற்றப்   புலன்  விசாரணைத்  துறை  (சிசிஐடி)  தலைவர்  மொர்டாட்ஸா  நஸரின்   செய்தியாளர்   கூட்டமொன்றில்    இதனைத்   தெரிவித்தார்.

“நாங்கள்   எத்தனையோ   செய்தியாளர்   கூட்டங்களை   நடத்துகிறோம். 1எம்டிபிமீதான   செய்தியாளர்   கூட்டம்   என்றால்    அதை   என்   போஸ்  இன்ஸ்பெக்டர்-  ஜெனரல்  அப்   போலீஸ்   மட்டும்தான்   கூட்ட   முடியும்.

“எனவே,  1எம்டிபி  பற்றிக்   கேட்பதாக  இருந்தால்   ஐஜிபி-யைக்  கேளுங்கள்”,என்றார்.

முன்பு  காலிட்டைக்  கேட்டபோது  அமெரிக்க   சிவில்  வழக்குகள்   குறித்து  மலேசிய  போலீசுடன்   ஆலோசனை   கலக்கவில்லை   என்பதால்  அது  பற்றிக்  கருத்துரைக்க  மறுத்து   விட்டார்.