அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி தொடர்புடைய சொத்துகளைப் பறிமுதல் செய்ய தொடுத்துள்ள சிவில் வழக்குகள் குறித்து கருத்துரைக்கக்கூடிய ஒரே போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மட்டுமே.
புக்கிட் அமானில், பணிஓய்வு பெறும் வணிகக் குற்றப் புலன் விசாரணைத் துறை (சிசிஐடி) தலைவர் மொர்டாட்ஸா நஸரின் செய்தியாளர் கூட்டமொன்றில் இதனைத் தெரிவித்தார்.
“நாங்கள் எத்தனையோ செய்தியாளர் கூட்டங்களை நடத்துகிறோம். 1எம்டிபிமீதான செய்தியாளர் கூட்டம் என்றால் அதை என் போஸ் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மட்டும்தான் கூட்ட முடியும்.
“எனவே, 1எம்டிபி பற்றிக் கேட்பதாக இருந்தால் ஐஜிபி-யைக் கேளுங்கள்”,என்றார்.
முன்பு காலிட்டைக் கேட்டபோது அமெரிக்க சிவில் வழக்குகள் குறித்து மலேசிய போலீசுடன் ஆலோசனை கலக்கவில்லை என்பதால் அது பற்றிக் கருத்துரைக்க மறுத்து விட்டார்.