மலேசிய திரைப்படவிழாவில் பிரிவினை வேண்டாம்: மஇகா

subraமஇகா  தலைவர்   டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்  28வது  மலேசிய  திரைப்பட  விழா(எப்எப்எம்)வில்  படங்களை  மொழிவாரியாக  பிரித்துப்  பார்க்க  வேண்டாம்   என்று   மலேசிய   தேசிய  திரைப்பட   மேம்பாட்டு   நிறுவனத்தை(பினாஸ்)க்  கேட்டுக்கொண்டார்.

மலேசியர்களை  ஒன்றிணைப்பதில்   கலைத்துறை      மற்ற   தொழில்துறைகளுக்கு    முன்மாதிரியாக  திகழ  வேண்டும்  என்றாரவர்.

“ஏன்  இந்தப்  பாகுபாடு?  ஒற்றுமை  ஊடகங்களான  பண்பாடு,  விளையாட்டு  போன்ற  துறைகளில்  பிரிவினையை  உருவாக்கி  விடாதீர்கள்”,  என்றவர்  வலியுறுத்தினார்.

எதிர்வரும்    மலேசிய   திரைப்பட   விழாவில்    திரைப்படங்கள்   மலாய்மொழி பிரிவு ,   மலாய்மொழி அல்லாத பிரிவு என இருவகையாக பிரிக்கப்பட்டு   விருதளிக்கப்படும்   என்று    பினாசும் மலேசிய  திரைப்படத்   தயாரிப்பாளர்   சங்கமும்    அறிவித்துள்ளது  குறித்து    சுகாதார  அமைச்சர்  கருத்துரைத்தார்.