மஇகா தலைவர்: முகைதின் கட்சி பூமிபுத்ரா- அல்லாதாருக்கு எதிராக பாரபட்சம் காண்பிக்கும் கட்சி

subraபூமிபுத்ரா- அல்லாதார்,  அவர்களுக்கு     எதிராக  பாரபட்சம்    காட்டும்   ஓர்   அரசியல்    கட்சியில்  எதற்காகச்  சேர   வேண்டும்   என்று   வினவுகிறார்  மஇகா   தலைவர்   டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்.

பார்டி   பிரிபூமி  பெர்சத்து    மலேசியா    கட்சியில்  பூமிபூத்ரா  உறுப்பினர்களுக்கும்   பூமிபுத்ரா- அல்லாத  உறுப்பினர்களுக்குமிடையே    பாகுபாடு  காட்டப்படுவதை    அவர்  சுட்டிக்காட்டினார்.

“இரண்டு  வகை  உறுப்புரிமை – ஒன்று  உரிமைகளைக்   கொண்டது    மற்றது  உரிமையற்றது-   அங்கு  இனவேறுபாடு    நிலவுவதைக்  காண்பிக்கிறது.  தொடக்கத்திலிருந்தே   அது  பாகுபாட்டைக்   கடைப்பிடிக்கிறது.

“எனவே,  பூமிபுத்ரா-  அல்லாதார்   அதில்  சேர்ந்தால்  தொடக்கத்திலிருந்தே   அவர்கள்   இரண்டாம்   தர  உறுப்பினர்களாகத்தான்   நடத்தப்படுவார்கள்”,எனச்  சுகாதார  அமைச்சருமான  சுப்ரமணியம்   கூறினார்.