மலாய் உரிமைகளுக்காக போராடி வரும் பெர்காசா, பொதுக் கணக்குக்குழுத் தலைவர் ஹசான் அரிப்பின் 1எம்டிபி விவகாரத்தை மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பது கண்டு ஏமாற்றமடைந்துள்ளது.
“1எம்டிபி விவகாரம் குறித்து பிஏசி மீண்டும் விசாரணை செய்வது அவசியம் என பெர்காசாவின் ஊழல்-எதிர்ப்பு, அதிகார அத்துமீறல் பிரிவு நினைக்கிறது. ஏனென்றால் அக்குழுவின் விசாரணை முழுமை அடையவில்லை. அது அவ்வூழலுடன் அணுக்கமாக தொடர்புள்ளவர்கள் என்று கூறப்படும் தொழிலதிபர் ஜோ லோ-வையும் திரைப்படத் தயாரிப்பாளர் ரிசா அசீசையும் விசாரணைக்கு அழைக்கத் தவறிவிட்டது.
“அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டத்துறைத் தலைவர் லோரெட்டா இ. லிஞ்ச்வழி வெளியிட்டிருக்கும் தகவல்களுக்கு ஏற்ப பிஏசி அதன் விசாரணையை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும்”, என பெர்காசாவின் ஊழல்-எதிர்ப்புப் பிரிவுச் செயலாளர் முகம்மட் பைய்ஸ் நா’அமான் ஓர் அறிக்கையில் கூறினார்.