ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனைகள் பெண்டெலெலா ரினோங், சியோங் ஜுன் ஹூங் ஆகிய இருவரும் அவர்களைப் பாராட்டி வழங்கப்படும் ரிம600, 000 ரொக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் அத்துடன் வாழ்நாள் முழுக்க ரிம3,000 ஓய்வூதியமும் பெறுவார்கள்.
தேசிய விளையாட்டுகள் மன்றம், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவோரை ஊக்குவிப்பதற்கென்றே ஒரு திட்டம் வைத்துள்ளது. அத்திட்டத்தின்கீழ் தங்கப் பதக்கம் பெறுவோருக்கு ரிம1மில்லியன் ரொக்கம் வழங்கப்படுவதுடன் மாத ஓய்வூதியமாக ஐயாயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும். வெள்ளிப் பதக்கத்துக்கு ரிம600,000 ரொக்கப் பரிசு, ரிம3,000 வாழ்நாள் ஓய்வூதியம். வெண்கலத்துக்கு ரிம100,000 ரொக்கம், ரிம2,000 ஓய்வூதியம்.
10 மீட்டர் உயர மேடையிலிருந்து டைவ் அடிக்கும் போட்டியில் அவ்விருவரும் 344.34 புள்ளிகளைப் பெற்று மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தனர்.
பெண்டெலெலா ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தந்த முதலாவது பெண்ணாவார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 10மீட்டர் உயரத்திலிருந்து டைவ் அடிக்கும் போட்டியில் அவர் வெண்கலம் வென்றார்.


























தங்களை போன்றவர்களை மலேசியர்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். சோம்பேறிகளாக, மற்றவர்களை குறை சொல்லாமல், உங்கள் துறையில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள் பெண்டெலெலா ரினோங், சியோங் ஜுன் ஹூங் !