பிஎன் “விரைவில்” திடீர் தேர்தலை நடத்தும் என்கிறார் முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹித்தாம். டாக்டர் மகாதிர் முகம்மட்டின் பார்டி பிரிபூமி பெர்சத்து (பெர்சத்து) வலுவாகக் காலூன்றுவதற்குள் அது நடத்தப்படலாம் என்பது அவரது கணிப்பு.
“பிஎன் விரைவில் தேர்தலை நடத்தும் என்றுதான் நினைக்கிறேன்.
“அப்படி நடக்குமானால் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து ஒரு வலுவான சக்தியாக உருவெடுப்பதுதான் எதிரணிக்குப் பெரும் சவாலாக இருக்கும்”, என மூசா இன்று கோலாலும்பூரில் “Frankly Speaking” என்ற அவரது நூல் வெளியீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மகாதிர் பிரதமருக்குத் துணைப் பிரதமராக இருந்த மூசா, தொகுதி ஒதுக்கீடு அவர்களுக்கு இன்னொரு பிரச்னையாகும் என்றார்.
“தேர்தலில் வெற்றிபெற அவர்கள் தொகுதி ஒதுக்கீட்டில் ஒத்தகருத்தைக் கொண்டிருப்பது அவசியம். கடந்த காலங்களில் பெரும்பாலும் அது இருந்ததில்லை”,என்று அம்னோவின் முன்னாள் தலைவருமான மூசா கூறினார்.


























தன் மகனின் மந்திரி புசார் பதவி பறிபோய்விட்ததனால் டாக்டர் மகாதிமிரும், தனது துணை பிரதமர் பதவி பிடுங்கப்பட்டதால் முகைதீன் யாசினும், சேர்ந்து உருவாக்கப்படும் உருப்பட இயலாத ஒரு கட்சி இது. விரக்தியினால் ஏற்பட்ட தற்காலிக கூட்டு. 1990 ல் இப்படியொரு சம்பவம் நடந்தது. 1988 ல் அம்னோவிலிருந்து தூக்கி எறியப்பட்ட துங்கு ரசாலி, ‘semangat 46’ என்கிற ஒரு கட்சியை ஆரம்பித்தார். 1990, 1995 தேர்தல்களில் ஆய்.. ஊய்…என கோஷம் போட்டு எதிர்க்கட்சி வரிசையில் பெரிய பந்தா காட்டினார்கள். அக்கட்சியிலுள்ள அனைவருக்கும்[ரசாலி உட்பட] இனிப்பான குச்சி மிட்டாய் கொடுத்தார் மகாதிமிர். ‘semangat 46’ ல் உள்ள அனைவரும் வாலாட்டிக் கொண்டு மகாதிமிருடன் ஒட்டிக் கொண்டார்கள். அதே கதைதான் தற்போதைய புதிய கட்சிக்கும் ஏற்படப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
மூசா
அவர்கள் மறைமுகமாக பி என் க்கு நல்ல ஒரு ஆலோசனையை வழங்கி
உள்ளார் !! எதிர் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை ! அவர்களுக்குள்லே புரிந்துணர் உ கிடையாது ! தொகுதி பங்கீட்டில் பிரச்சனைகள் அதிகம் ! பாரிசானுக்கு அமாம் சாமி காட்சிகள் ஆதரவு அதிகம் !!