நிறுவன நிர்வாக இயக்குனர் விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்

maccநூல்  வெளியீட்டு  நிறுவனத்தின்   நிர்வாக   இயக்குனர்  ஒருவர்,   மலேசிய  ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)த்தின்    12-நாள்   தடுப்புக்  காவலில்   இருந்த   பின்னர்  இன்று  விடுவிக்கப்பட்டார்.

தடுப்புக்காவலை  நீட்டிக்குமாறு     எம்ஏசிசி     கேட்டுக்கொள்ளாததால்   மெஜிஸ்திரேட்   நிக்   இஸ்ஃபானி   தஸ்னிம்    வான்   அப்துல்    ரஹ்மான்  அந்த  40-வயது    ஆடவரை    விடுவித்தார்.

ரிம15 மில்லியன்  நூல்  வெளியிடும்   திட்டத்தில்    நிகழ்ந்த   மோசடி   தொடர்பில்    அவரைத்   தடுத்து  வைத்து   எம்ஏசிசி    விசாரணை   செய்து  வந்தது.

எம்ஏசிசி-இன்   பிணையில்   அவர்  விடுவிக்கப்பட்டார்.