கஜானா ஆராய்ச்சிக் கழகம் (கேஆர்ஐ) ஆய்வு நடத்தி பேராக்கில் வறுமை நிலவுவதாகக் கூறியிருப்பதை எக்காரணம் கொண்டும் மாநில அரசு மறுக்கவியலாது என பார்டி அமனா நெகாரா கூறியது.
பேராக் அமனா துணைத் தலைவர் ஹஸ்னுல் சுல்கர்னைன், லாருட் தொகுதியில் மட்டும் “மிகவும் ஏழ்மைநிலைமையில்” உள்ள பலர் இருப்பது தெரிய வந்ததாகக் கூறினார்.
“மின்சாரமோ குழாய் நீரோ இல்லாத வீடுகள் இன்னும் இருக்கின்றன. தண்ணீருக்குக் கிணறுகள் அல்லது ஆறுகளைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
“மெழுகுதிரியின் மங்கலான வெளிச்சம்தான் துணை. மற்றபடி இருளில்தான் வாழ்கிறார்கள்”, என்றாரவர்.
கேஆர்ஐ ஆகஸ்ட் 29-இல் வெளியிட்டிருந்த அறிக்கையில், பேராக்கில் உள்ள குடும்பங்களில் 81.1 விழுக்காடு ரிம6,000-க்கும் குறைவாக மாத வருமானம் பெறும் குடும்பங்கள் என்று கூறியிருந்தது. அதேவேளை ரிம2,000-த்துக்கும் குறைவாக மாதம் பெறுவோரை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது பெரிய மாநிலமும் அதுதான் என்று அது குறிப்பிட்டிருந்தது.
பேராக்கை ஏழை மாநிலம் என்று கேஆர்ஐ வகைப்படுத்தியதை பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிரால் ஏற்க முடியவில்லை.
“கேஆர்ஐ அறிக்கை பேராக்கைப் பற்றி நல்லவிதமாகச் சித்திரித்துக் காட்டவில்லை. நாம் கிளந்தான்போல் ஏழ்மை நிலையில் இருப்பதுபோல் காண்பித்துள்ளது. பேராக்கை ஓர் ஏழை மாநிலம் என்றுரைப்பது தவறு”, என்றவர் சொன்னதாக அஸ்ட்ரோ அவானி கூறிற்று.
ஹஸ்னுல் நேற்று விடுத்த அறிக்கையில் அமனா இளைஞர் பகுதியினர், 10 குடும்பங்களைச் சென்று கண்டதாகவும் அவர்களின் நிலை கண்டு வருந்தியதாகவும் கூறினார்.
“அக்குடும்பங்களின் மாத வருமானம் ரிம800-க்கும் குறைவு. அடிப்படைத் தேவைகளுக்கே அது போதாது. பிறகு எப்படி நவீன வாழ்க்கை வாழ்வது”, என ஹஸ்னுல் வினவினார்.
ஜம்ரி மறுப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை.
“பிரச்சாரம் செய்தது போதும். மாநிலத்தை நேர்மையாக ஆட்சி செய்யுங்கள்”, என்று ஹஸ்னுல் கேட்டுக்கொண்டார்


























மாநிலத்தை நேர்மையாக ஆட்சி செய்யுங்கள்!? உங்க கட்சி ஆட்சியில் என்ன நடக்குதோ அதான் தே. மு. கட்சி ஆளும் மாநிலத்திலும் நடக்குது. கூட்டிக் கழிச்சிப் பாருங்க. எல்லாம் சரியாகத்தான் வரும்!
யார்
வந்தாலும்
சரி
நமக்கு
பூமிபுத்தர பதவி
கிடைக்குமா? அதை
பேசுங்கடா கை நக்கிகளா!!!
கூட்டிக் கழிச்சிப் பாருங்க. எல்லாம் சரியாகத்தான் வரும்! பூமிபுத்தர பதவி
நமக்கு
கிடைக்குமா
???!!!
எவன்
வந்தாலும்
கைநக்கிகள்
இருக்கும்
வரை
நம்
இனம்
கோவிந்தா
கோவிந்தா
.
அதுக்குதான் ஒரு மாமடையன் இளங்கோவ் இருக்கானே .நாடடாடு வெட்டி சோறு போட்டு நாமம் போடுவான்.
வெளிநாட்டு காரன் இங்கே வந்து ஆடம்பர வாழ்க்கை வாழுகிறான் ஆனால் நம்மவர்களோ அரசாங்கம் அது செய்ய வில்லை இது செய்ய வில்லை என்று குறை கூறி கொண்டு இருக்கிறோம் . நம் நாட்டில் என்ன தான் நம்வர்களுக்கு இன்னும் கிடைக்க வில்லை ? 1 முதல் 6 வகுப்பு வரை ஆரம்ப கல்வி . பிறகு படிவம் 1 முதல் 6 வரை இலவசமாக கல்வி . நல்ல மதிப்பெண்கள் கடைதான் மேல்படிப்பு தொடர PTPTN நில் கடன் உதவி இன்னும் என்னதான் வென்றும் ?
நம்மவர்கள் அமைச்சர்களாக உள்ளனர் . அரசாங்கத்தில் நல்ல வேலையில் பலர் உள்ளனர் . இன்னும் என்னதான் வேணும் ?????
வேலைக்கு போகாமல் பலர் வாழ நினைக்கிறார்களோ ?????