குடிமக்கள் பிரகடனத்தை ஆட்சியாளர் மன்றத்துக்கு அனுப்பினார் மகாதிர்

dr mடாக்டர்   மகாதிர்   முகம்மட் ,     ஆட்சியாளர்   மன்றத்துக்கு    அம்மன்றம்   அக்டோபர்   11-இல்   அதன்    கூட்டத்தை    நடத்துவதற்குமுன்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கைப்   பதவி   விலகக்   கோரும்   குடிமக்கள்   பிரகடனத்தை        அனுப்பி  வைத்துள்ளார்.

முன்னாள்   பிரதமர்,  பிரகடனத்துடன்      செப்டம்பர்  9-இல்   தாம்   பேரரசரை   கெடா,  அலோர்    ஸ்டார்,   இஸ்தானா   அனாக்   புக்கிட்டில்    சந்தித்து    பேசியதை   விவரிக்கும்   கடிதம்  ஒன்றையும்   இணைத்துள்ளார்.

“சந்திப்பு   தொடர்பாக    பேரரசரிடமிருந்து    இதுவரை    மறுமொழி   எதுவும்  இல்லை.

“எனவே,  மன்றம்   அக்டோபர்  11-இல்   கூடுவதால்,     ஆட்சியாளர்கள்   அனைவருக்கும்  கடிதம்   எழுதுவது  நல்லது   என்று   நினைத்தேன்.

“குடிமக்கள்   பிரகடனத்தில்   கூறப்பட்டிருப்பதை   அடிப்படையாக   வைத்து    நடவடிக்கை   எடுக்க   வேண்டும்   என்ற   நமது  கோரிக்கையை   அவர்களுக்குத்    தெரியப்படுத்துவதற்காக   அப்படிச்    செய்தேன்”,  என  சினார்  ஹரியானிடம்   மகாதிர்    தெரிவித்தார்.