அம்னோ எம்பி கூறுவதைப் பார்த்தால் எம்ஏசிசி நஜிப்பையும் விசாரிக்க வேண்டும் -லிப் எங்

mpசாபா    அம்னோ    எம்பி    ரேய்மி   உங்கி,   சாபாவில்  நிகழ்ந்துள்ள   மிகப்   பெரிய   ஊழல்   தொடர்பில்   மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி)    முன்னாள்   அமைச்சர்    முகம்மட்  ஷாபி   அப்டாலையும்   விசாரிக்க   வேண்டும்    என்று  கூறியிருப்பதை    வைத்துப்  பார்த்தால்    மற்ற   அமைச்சர்களையும்,   ஏன்   பிரதமர்   நஜிப்   அப்துல்    ரசாக்கையும்கூட   விசாரிக்க    வேண்டியிருக்கும்.

இவ்வாறு    கூறிய  செகாம்புட்   எம்பி  லிம்   லிப்  எங்,   தெனோம்  எம்பியின்  கூற்று   விசித்திரமாக   உள்ளது   என்றார்.    இவ்வளவு   பேசும்   ரேய்மி,    பல்வேறு    அமைச்சுகளில்  ஊழல்கள்    நிகழ்ந்தபோதும்     பிரதமரின்   மாற்றான்  பிள்ளை   பற்றி    செய்திகள்    வந்தபோதும்     எங்கு   போயிருந்தார்    என்றவர்   வினவினார்.

“எனக்குப்  புரியவில்லை. ரேய்மி   எங்கிருந்து   திடீரென்று   வந்துள்ளார்??  நேற்றுவரை   வேறொரு   கோளில்    இருந்தாரா?”,  என   லிம்    கேள்வி  எழுப்பினார்.

2012க்கும்  2015க்குமிடையில்   இளைஞர்,  விளையாட்டுத்துறை   அமைச்சில்   ரிம138 மில்லியன்    அளவுக்கு   ஊழல்   நிகழ்ந்து    அதன்   தொடர்பில்   அதிகாரி   ஒருவர்   கைது   செய்யப்பட்டபோது   அமைச்சின்   முன்னாள்  இந்நாள்   அமைச்சர்களான    ஷபரி   சிக்,   கைரி  ஜமாலுடின்   ஆகியோரையும்   விசாரிக்க    வேண்டும்   என்று    அவர்  சொல்லவில்லையே    அது   ஏன்   என்று   லிம்  வினவினார்.

“ரேய்மியின்   கூற்றுப்படி    பார்த்தால்    சம்பந்தப்பட்ட   அந்த    அதிகாரி   அவரின்   முன்னாள்   எஜமானர்களுக்குத்    தெரியாமல்   அவ்வளவு   பெரிய   தொகையைக்   கையாடி  இருக்க   முடியாதே”,  என  லிம்   அறிக்கை   ஒன்றில்   கூறினார்.

ரேய்மின்   கோரிக்கையை   ஏற்று   எம்ஏசிசி    ஷாபியை   விசாரிப்பதாக  இருந்தால்,  கோலாலும்பூர்   மாகராட்சி   மன்றத்தில்  நிகழ்ந்த   ஊழல்      தொடர்பில்     ஆணையம்     கூட்டரசுப்   பிரதேச    அமைச்சர்    தெங்கு   அட்னான்    தெங்கு   மன்சூரையும்   விசாரிக்க    வேண்டும்.

அதேபோல்,    ஒரு   வங்கியில்    நான்காண்டுகள்   இளநிலை   அதிகாரி  இருந்த    ரிஸா   அசிஸ்   Red Granite Capital  நிறுவனத்துக்கு   யுஎஸ்$238 மில்லியன்   சேர்த்தது    எப்படி    சொந்தத்துக்கு   அமெரிக்காவில்   யுஎஸ்50  பெறுமதியுள்ள   சொத்து    சேர்க்க   முடிந்தது    எப்படி    என்று    அவரின்   தாயார்    ரோஸ்மா   மன்சூரையும்   மாற்றான்   தந்தை    நஜிப்பையும்   விசாரிக்க    வேண்டும்   என்று      ரேய்மியும்   மற்ற   பிஎன்   எம்பிகளும்   கூறுவார்களா    என்றும்   லிம்   வினவினார்.