மகாதிர்: பெர்சத்துவுக்குத் தலைவராகும் தகுதி முகைதினுக்கு உண்டு ஆனால், நாட்டுக்கு…….

dr mமுன்னாள்   பிரதமர்    டாக்டர்    மகாதிர்   முகம்மட்    இரண்டு   வாரங்களுக்குமுன்   லண்டனில்   ஒரு   கூட்டத்தில்   பேசியபோது   நாட்டின்    பிரதமராவதற்கு    பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா    தலைவர்   முகைதினிடம்   எல்லாத்    தகுதியும்   உண்டு    என்று   கூறியிருந்தார்.

ஆனால்,  புதன்கிழமை   புத்ரா   ஜெயாவில்    மலேசியாகினிக்கு  வழங்கிய    நேர்காணலில்   முகைதின்   அடுத்த   பிரதமராவாரா  என்று    கேட்டதற்கு     மகாதிர்   வேறுவிதமாக   பதிலளித்தார்.

“என்னைக்  கேட்டால்,  ஆதரவு   இருந்தால்   அவரால்    வழிநடத்த   முடியும்”,  என்று    கூறியவர்     உடனே  நிறுத்தி,  நிதானமாக   “அதாவது   கட்சியை”   என்றார்.

“அவரால்    அரசாங்கத்தை   வழிநடத்த   முடியுமா    என்பது   வேறு   விசயம்”,  என்றும்   தொடர்ந்து   கூறினார்.

இது  லண்டனில்    அவர்    கூறியதற்கு   முரணாக     இருந்தது.

“பிரதமராக   யாரைத்   தேர்ந்தெடுப்பது    என்பது    (தேர்தலில்  வென்ற  பிறகு)   கட்சிகள்  ஒன்றுகூடி   முடிவெடுக்க  வேண்டிய   ஒன்று.

“யார்  பிரதமராக   வேண்டும்   என்பதை   நான்   உரைப்பது   முறையாகாது”,  என்றார்.

எதிர்காலத்   தலைவர்கள்   பற்றிப்   பேசும்போது,  ஒருவர்   அதிகாரத்துக்கு   வந்த   பின்னர்தான்     அவருக்கு   நாட்டை    வழிநடத்தும்    ஆற்றல்    இருக்கிறதா   என்பதைத்   தீர்மானிக்க    முடியும்    என்றும்   மகாதிர்    குறிப்பிட்டார்.    “நான்  பல  தடவை    தவறான    தலைவர்களைத்   தேர்ந்தெடுத்தேன்”  என்றும்   அவர்   சொன்னார்