முஸ்லிம்- அல்லாதவர்’ என்று அறிவிக்கக் கோரும் பெண்ணின் வழக்கை மறுபடியும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

court தம்மை  இஸ்லாமிய    சட்டத்துக்கு   உட்பட்டவர்    அல்லர்   என்று   அறிவிக்க   வேண்டுமென்று   ரோஸ்லிசா    இப்ராகிம்    தொடுத்த   வழக்கை   மறுபடியும்    விசாரிக்க   வேண்டும்   என்று    முறையீட்டு    நீதிமன்றம்    உத்தரவிட்டிருக்கிறது.

மறுவிசாரணைக்காக   அவ்வழக்கை    ஷா   ஆலம்     உயர்   நீதிமன்றத்துக்கே   திருப்பி   அனுப்புவதாகவும்   வழக்கை    முன்னர்   விசாரித்த   நீதிபதி    அல்லாமல்   வேறொருவரை   வைத்து  விசாரிக்க    வேண்டும்   எனவும்   அது   கூறிற்று.

அவ்வழக்கை   உயர்  நீதிமன்றம்   தள்ளுபடி    செய்த    காரணம்   சரியல்ல  என்று   முறையீட்டு    நீதிமன்றத்தின்  மூவரடங்கிய    நீதிபதிகள்  குழுவுக்குத்    தலைமை    தாங்கிய      நீதிபதி   ஆபாங்   இஸ்கண்டர்   ஆபாங்   ஹஷிம்    கூறினார்.

தன்னை    முஸ்லிம்     தந்தைக்கும்     பெளத்தரான     தாயாருக்கும்    பிறந்த    சட்டவிரோத    பிள்ளை      என்று    கூறிக்கொள்ளும்    ரோஸ்லிசா,35,     தன்   தாயார்    ஒரு   பெளத்தராகவே    தன்னை    வளர்த்ததாகவும்    தந்தை    தன்   நலனில்   என்றும்     அக்கறை     காட்டியதில்லை    என்றும்   கூறினார்.

தான்   ஷியாரியா    சட்டத்துக்கோ    ஷியாரியா     நீதிமன்றங்களுக்கோ    உட்பட்டவர்    அல்ல   என்று    அறிவிக்குமாறு    அவர்    கோருகிறார்.