‘தீபாவளிக்கு நீண்ட விடுமுறை இல்லையே’, பல்கலைக்கழக மாணவர்களும் காப்பார் எம்பியும் ஆதங்கம்

deepavaliஇவ்வாண்டு   தீபாவளிக்கு   நீண்ட   விடுமுறை   இல்லை    என்பதால்   பல்கலைக்கழக    மாணவர்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள்.

நீண்ட  விடுமுறையை   விரும்பும்    அவர்கள்     அதற்காக   இணையத்தில்  மாணவர்-  மகஜர்  ஒன்றைத்   தொடங்கியுள்ளனர்.  மலாய்,  சீன   மாணவர்கள்  உள்பட   1,400-க்கு   மேற்பட்டோர்   அதில்  கையொப்பமிட்டுள்ளனர்.

காப்பார்   எம்பி   ஜி.மணிவண்ணனும்   இன்று   நாடாளுமன்ற  வளாகத்தில்    செய்தியாளர்    கூட்டமொன்றில்   இவ்விவகாரம்   குறித்து     கருத்துரைத்தார்.  மாணவர்களுக்கு   ஒரு   வாரம்   விடுமுறை    அளிக்க   வேண்டும்    என்றவர்   கேட்டுக்கொண்டார்.

“இப்போது   அவர்களுக்கு   ஒரு   வார இறுதி  மட்டும்தான்.   ஒரு   நாள்  குடும்பதோடு  இருப்பார்கள்,  மறுநாள்   பல்கலைக்கழகம்  புறப்பட     வேண்டும்.

“இது   மாணவர்களூக்கு   எதிரான   ஒருவகை    பாகுபாடுதான்”,  என்று   மணிவண்ணன்   கூறினார்.