மொனாஷ் பல்கலைக்கழக மாணவர்கள் சட்ட விரோத பேரணிகளில் கலந்து கொண்டால் கட்டொழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும் என அப்பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
இந்த மின்னஞ்சல் எச்சரிக்கையைப் பல்கலைக்கழகப் பதிவாளர் சுசிலா நாயர், நேற்று மாணவர்களுக்கு அனுப்பியிருந்தார்.
“மலேசிய சட்டங்களை மீறும் சட்டவிரோத ஒன்றுகூடலில்/ அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
“அப்படிப்பட்ட ஒன்றுகூடலில்/ அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் அல்லது அதற்காகக் கைதாகும் மாணவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்”, என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.
அம்னோ ஆட்சியில் எல்லா நியாயமான கோரிக்கைகள் சட்ட விரோதமாயிற்றே? மொனாஷ் பல்கலை கழகம் பயமுறுத்தப்படிருக்கின்றது என்பது வெளிச்சம். எல்லாம் நம்பிக்கை நாயகனின் அடிவருடிகள் செய்யும் வேலை.