பெர்சேயும் சிவப்புச் சட்டையினரும் ஏக காலத்தில் பேரணி நடத்துவதைத் தடுக்க சட்டத்தில் இடமுண்டு என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் போலீசுக்கும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்ப் பேரணியால் சச்சரவு மூளுமென்று நினைத்தால் அதை வேறொரு நாளில் அல்லது வேறொரு இடத்தில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் மாவட்டத்தின் பொறுப்பதிகாரி உத்தரவிடலாம் என 2012 அமைதிப் பேரணிச் சட்டம் பகுதி 18 கூறுகிறது.
அப்படி ஒரு சட்டம் இல்லாததுபோல் அதிகாரிகள் “பாசாங்கு” செய்யக்கூடாது என மனித உரிமை வழக்குரைஞர் எரிக் பால்சன் கூறினார்.
“வேறொரு நாளில், நேரத்தில் அல்லது இடத்தில் (பேரணியை) நடத்துமாறு சிவப்புச் சட்டையினருக்கு உத்தவிட வேண்டும்”, என்று அவர் நேற்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது அவரது நிர்வாகம்தான் என்பதால் அது குறித்து நஜிப் நன்றாக அறிந்திருப்பார் என்று கூறினார்.
“பிரதமர் சனிக்கிழமை குறித்துக் கவலைப்படுவதால், அவர் அமைதிப் பேரணிச் சட்டம் பகுதி 18-இன்கீழ்- அவர் கொண்டுவந்த சட்டம்தான் இது- நடவடிக்கை எடுக்குமாறு போலீசைப் பணிக்க வேண்டும்”, என்று அம்பிகா டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் நஜிப் தான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது வாங்கிய ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணுகுண்டை ஏவி இரு அணிகளையும் கலைக்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறாராம். இருந்தாலும் நம்ம பிரதமருக்கு லொள்ளு ஜாஸ்திதான்.
2012 அமைதி பேரணி சட்டம் பகுதி 18-ஐ போலீசை அறியாமல் இருக்கலாம் ஆனால் உள்துறை அமைச்சருமா அறியாமல் இருக்கிறார். சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு உள்துறை அமைச்சர்.
MALAYSIA BOLEH !