‘நன்கு அறியப்படாத நிறுவனங்களுடன்’ சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது ஏன்? டிஎன்பியிடம் எம்பி கேள்வி

ongசூரிய   ஆற்றல்  நிறுவனக்  குழுமம்   ஒன்றுடன்   டிஎன்பி   செய்து  கொண்ட   ஒப்பந்தம்   குறித்த   தகவல்களை   புத்ரா  ஜெயா      வெளியிட   வேண்டும்.  அத்திட்டத்தின்   மதிப்பு,  ஏன்  அந்த  நிறுவனங்கள்   தேர்ந்தெடுக்கப்பட்டன   என்ற  விவரங்களும்   வெலியிடப்பட   வேண்டும்.

அக்குழுமத்தில்   இடம்பெற்ற   மூன்று   நிறுவனங்களுக்கும்   சூரிய  ஆற்றலிலிருந்து   மின்சாரம்  தயாரிக்கும்   துறையில்   முன்அனுபவம்   இருப்பதுபோல்    தெரியவில்லை   என்பதால்    அந்த  ஒப்பந்தம்   செய்து  கொள்ளப்பட்டது   ஏன்   என்பது  விளங்கவில்லை     என   செர்டாங்  எம்பி   ஒங்  கியான்   மிங்   கூறினார்.

பங்குச்   சந்தையில்   டிஎன்பி  செய்துள்ள  பதிவின்படி  Itramas Technology Sdn Bhd, Maltechpro Sdn Bhd,  Cam-Lite Sdn Bhd  ஆகிய   மூன்றுமே  அந்நிறுவனங்களாகும்.

Maltech Pro, இதுதான்  1மலேசியா  கைக்கணினியை   அறிமுகம்   செய்த  நிறுவனம்,   அதன்   முக்கிய   தொழில்   “கைபேசி   செயலிகள்,  கருவிகள், சாதனங்கள்”  என்று   நிறுவனப்   பதிவு    ஆணையப்   பதிவுகளில்   குறிப்பிட்டுள்ளது.

“Maltech Proவின்   பங்குதாரர்  விவரமும்   பல   கேள்விகளை   எழுப்புகிறது. அதில்  35 விழுக்காடு  பங்குரிமை  வைத்துள்ள   சொஹாய்மி    ஷஹாடான்   அம்னோ   உச்சமன்ற   உறுப்பினர்.

“20 விழுக்காடு  பங்கு  வைத்துள்ள    அஹ்மட்  ஜவ்ரி    சுலைமான்,      ஷா   ஆலமில்  ஒரு  அம்னோ   தலைவர்.

“150MW   சூரிய   ஆற்றல்  பண்ணை  குத்தகை   அந்தக் குழுமத்திடம்   கொடுக்கப்பட்டதற்கு   இது    ஒரு   காரணமா?”,  என்று  ஒங்  வினவினார்.

Cam-Lite  நிறுவனம்   “மின்னியல்   பொருள்கள்   விற்பனை”  செய்யும்   நிறுவனம்   என்றும்   2012  முடிய   அதன்  வருமானம்  ரிம131,359    என்றும்  அதில்  ஆதாயம்   ரிம1,397   என்றும்   அந்நிறுவனம்   பற்றிய   பொது  ஆவணங்கள்   கூறுகின்றன.

Maltech Pro,  Cam-Lite   இரண்டுக்குமே   வலைத்தளங்கள்  இருப்பதுபோல்   தெரியவில்லை   என   ஒங்   கூறினார்.

மூன்றாவது   நிறுவனமான  Itramas Technology  அதன்  வலைத்தளத்தில்  “அரசாங்கத்துக்காக   உயர்  பொறியியல்   திட்டங்களையும்   பசுமைத்   தொழில்நுட்பத்  திட்டங்களையும்    அமல்படுத்திய   அனுபவம்,     குறிப்பாக  எல்இடி  தொழில்நுட்பத்தில்  ”  அனுபவம்   இருப்பதாகக்  கூறியுள்ளது.

“ஆக,   இந்நிறுவனங்களுக்கு (சூரிய  ஆற்றல்  மின் உற்பத்தித்  துறையில்)  அனுபவம்    இல்லை   என்கிறபோது    இவர்களுக்கு  ஏன்  இந்தத்  குத்தகை    வழங்கப்பட்டது?

“இவை  டிஎன்பியுடன்   செய்து  கொண்ட  ஒப்பந்தத்தின்  மதிப்பு    என்ன?”, என்று   ஒங்  வினவினார்.