மலாக்கா அம்னோ ஆள்கள் சிவப்புச் சட்டை பேரணியில் கலந்து கொள்ளக் கூடாது: தெங்கு அட்னான்

adnanமலாக்கா   அம்னோ   தொடர்புக் குழு    அதன்  அடிநிலை   உறுப்பினர்கள்    சனிக்கிழமை   பெர்சே   பேரணிக்கு   எதிரான   சிவப்புச்   சட்டைகள்   பேரணியில்  கலந்து  கொள்ளலாம்   என்று   விடுத்த   உத்தரவை   மீட்டுக்  கொள்ள   வேண்டுமென   அம்னோ   தலைமைச்   செயலாளர்    தெங்கு   அட்னான்  தெங்கு   மன்சூர்   கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“கடிதத்தை   மீட்டுக்கொள்ளும்படியும்   சிவப்புச்   சட்டைப்  பேரணியோ,  மஞ்சள்   சட்டைப்   பேரணியோ,   வேறு   எந்த  நிறப்  பேரணியோ   எதிலும்  கலந்து  கொள்ள   வேண்டாம்   என்று   கூறி  இருக்கிறேன்”,  என்றாரவர

சிவப்புச்   சட்டைப்   பேரணிக்கு   ஏற்பாடு   செய்யும்    வகையில்   நடைபெறும்  ஒருங்கிணைப்புக்   கூட்டத்துக்கு  வருகை  புரியுமாறு   கட்சி   உறுப்பினர்களை   அழைக்கும்   ஒரு   கடிதம்   வலம்  வருவதை   அடுத்து   தெங்கு  அட்னான்   இவ்வாறு   கூறினார்.   அக்கடிதத்தை  எழுதியவர்   மலாக்கா   அம்னோ   தகவல்   தலைவர்   சுலைமான்   முகம்மட்   அலி  என்று   கூறப்படுகிறது.

“சிவப்புச்   சட்டையினருக்கும்   அம்னோவுக்கும்  சம்பந்தமில்லை”,  என்று  தெங்கு  அட்னான்    கூறினார்.

மலாக்கா   தொடர்புக்  குழு  மட்டும்தான்   அப்படி   ஒரு  கடிதத்தை    வெளியிட்டிருக்கிறது   என்பதை    உறுதிப்படுத்திய   அவர்,     தம்   உத்தரவுக்கிணங்க    அக்கடிதம்   மீட்டுக்கொள்ளப்பட்டது    என்றார்.

பேரணியில்    கலந்துகொள்ளும்   கட்சி   உறுப்பினர்களுக்கு   பேராக்   அம்னோ  ரிம50  கொடுக்க   முன்வந்திருப்பதாகக்   கூறப்படுவதையும்   தெங்கு   அட்னான்   மறுத்தார்.