பெர்சே போராட்டம் “போலியானது”: நஜிப் சாடல்

najibபெர்சே   நாளை  அதன்  5வது   பேரணியை   நடத்தத்   தயாராகிவரும்   வேளையில்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,   அந்த   அமைப்பின்   போராட்டமே  “போலியானது”  என்று   தம்   வலைபதிவில்   சாடினார்.

இரண்டாவது   பேரணி   தொடங்கி   ஐந்தாவது   பேரணிவரை   எதிரணித்    தலைவர்கள்தான்  பெர்சே  “கலகங்களை”  முன்னின்று   நடத்தி    வந்துள்ளனர்.

“மக்களால்     தேர்ந்தெடுக்கப்பட்ட     அரசாங்கத்தை   எதிர்ப்பதற்கு   தன்னை  கட்சிச்சார்பற்ற   ஒரு   என்ஜிஓ-போல்     காட்டிக்கொள்ளும்   எதிரணியின்   ஏற்பாடுதான்   இப்பேரணி   என்பதும்   அவர்களின்   போராட்டமே   போலியானது   என்பதும்   தெளிவாகத்   தெரியவில்லையா?

“எதிரணியின்   தந்திரங்களில்   மக்களில்  பெரும்பாலோருக்கு    சலிப்பு   ஏற்பட்டு   விட்டது.   அவர்கள்   அரசாங்கத்திடம்  சேவையைதான்   எதிர்பார்க்கிறார்கள்.  அதை     நானும்   என்  குழுவினரும்   தொடர்ந்து   வழங்கி   வருவோம்”,  என  நஜிப்  பதிவிட்டிருந்தார்.