பெர்சேயின் தலைவர் மரியா சின் மற்றும் பெர்சே அலுவலகச் செயலாளர் மன்டீப் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிற்பகல் மணி 3.00 அளவில் புக்கிட் அமானைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழுவும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் அதிகாரிகளும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சே அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அந்த இரண்டு மணி நேர சோதனையின் போது 10 கணினிகள், இரண்டு கைத்தொலைபேசிகள், அவர்களின் ஊதியம் பற்றிய சில ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று பெர்சே செய்திருக்கும் டிவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்சே தண்டனை சட்டத் தொகுப்பு செக்சன் 124C இன் கீழ் பெர்சே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகள் சம்பந்தப்பட்டது.
மரியாவும் மன்டீப்பும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
அடக்குமுறை தான் இவன்களின்-நம்பிக்கை நாயகன்-அம்னோ – நாதாரிகளின் ஆயுதம்–அறிவுள்ள ஜீவனாக இருந்தால் புரியும்– பேச்சுக்கு மட்டும் அளவில்லை–
பேரணி முடிந்ததும் விடுதலை!
*ஆயுதம்.(இவன்களின்)
சிகப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் முகமட் யூனுஸை ஒன்றும் புடுங்க முடில ..
மரியா சின் & மன்டீப் சிங் கைது BERSIH 5 -ன் வெற்றிக்கு முதல்படி இப்படி பேரணிகளுக்கு இலவச விளம்பரம் அளிப்பதில் மலேசிய போலீசை மிஞ்சக்கூடிய போலீஸ் வேறு எந்த உலகத்திலும் கிடையாது.
டெமோகிராசி நாடு