சிவப்புச் சட்டை: ஜமாலும் இதர இருவரும் நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டனர்

jamalசிவப்புச்   சட்டை   அணித்   தலைவர்    ஜமால்   முகம்மட்  யூனுசை  நான்கு  நாள்  தடுத்து  வைக்க  அம்பாங்   மெஜிஸ்திரேட்  நீதிமன்றம்   இன்று   உத்தரவிட்டது.

அம்பாங்  பாயிண்ட்   சம்பவத்துக்காக    அவரும்   மற்ற  இருவரும்   விசாரணைக்காக    தடுத்து   வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அம்மூவரும்   ஷா  ஆலம்    தடுப்பு   மையத்துக்குக்  கொண்டு   செல்லப்படுவதாக   அவர்களின்   சட்ட   ஆலோசகர்   முகம்மட்  இம்ரான்   தம்ரின்   கூறினார்.

கலகம்   செய்ததற்காக    குற்றவியல்   சட்டம்   பகுதி   147-இன்  கீழும்   அரசாங்க   அதிகாரி  பணி   செய்வதற்கு   தடங்கலாக   இருந்ததற்காக  பகுதி   186  பகுதி   353   ஆகியவற்றின்கீழும்   அவர்கள்   விசாரிக்கப்படுவார்கள்.