கேஎல் மேயர்: பேருந்து முனையம் முன்பே அம்னோவுக்கு விற்கப்பட்டு விட்டது

putraபுத்ரா  பேருந்து   முனையம்   பல   ஆண்டுகளுக்கு  முன்பே   அம்னோவுக்கு  விற்கப்பட்டு  விட்டதாக     கோலாலும்பூர்   மேயர்   முகம்மட்  அமின்   நோர்டின்   அப்துல்   அசீஸ்   கூறினார்.

“அதை  அம்னோவுக்கு   விற்றோம்.  அது  பற்றிய  விவரங்கள்  என்னிடம்  இல்லை.   ஆனால்,   கடந்த   ஆண்டில்   அல்ல,    பல   ஆண்டுகளுக்கு  முன்பே  அது   அம்னோவுக்கு  விற்கப்பட்டது”,  என்றாரவர்.

புத்ரா   உலக  வாணிக   மைய  மறுமேம்பாட்டுத்   திட்டத்தில்   புத்ரா  பேருந்து  மையமும்   உள்ளிட்டிருக்கும்.  அந்த  முனையம்  உள்ள  இடத்தில்   70-மாடி   அலுவலகக்  கட்டிடமும்   தங்கு  விடுதியும்   கட்டப்படும்.

இரண்டு  நாள்களுக்கு   முன்பு   பிரதமர்   நஜிப்  அப்துல்  ர்சாக்  அத்திட்டத்தை    அறிவித்தார்.