டாக்டர் மகாதிர் முகம்மட்டின் எதிர்ப்புக் கணைகள் இப்போது மசீசவை நோக்கித் திரும்பியுள்ளன. முன்னாள் பிரதமர், தம்முடன் நட்பு பாராட்டி வரும் டிஏபியைக் குறை சொல்லும் மசீசவைக் கடுமையாகச் சாடினார்.
மசீச மகாதிர்- டிஏபி கூட்டணியைக் குறைகூறுவதற்குமுன் “திருடும் போக்கைக்கொண்ட” பிரதமர் அப்துல் ரசாக்குடன் அது ஒட்டி உறவாடுவதைச் சற்றே எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர் தம் வலைப்பதிவில் கூறினார்.
“மசீசவுக்குக் கொள்கைகள் பற்றிப் பேசும் தகுதி இல்லை; அது சந்தர்ப்பவாதி. அது டான் செங் லோக்கின் மசீச அல்ல.
“இப்போது அது நஜிப்பின் இனவாத அம்னோவின் எடுபிடி, அவ்வளவுதான்”, என்றவர் சாடினார்.

























MCA மட்டுமா? மற்ற கட்சிகள்? MIC ? எல்லாமே எடுபிடிகள்-சப்பிகள்-இன்னும் எவ்வளவோ.இது ஒன்றும் புதிது இல்லையே!
அரசியலில் பொதுவாக எல்லோருமே உத்தம புத்திரன் போல்தான் பேசுவார்கள்; மக்களுக்கு நினைவாற்றல் நிலைத்து நிற்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்தவர்கள் ! சில ஆண்டுகளுக்கு முன் மகாதீர் பிரதமராக இருந்த போது ” மலேசிய மலேசியர்களுக்கே ” என்று டி.ஏ.பி முழங்குகிறதே என்று நிருபர்கள் மகாதீரிடம் வினவியதற்கு ; நமது அரசியல் அமைப்பு “பெர்செகுத்துவான் தனா மிலாயு ” என்றுதான் குறிப்பிடுகிறது என்று இனவாதத்தோடு பதிலளித்தவர் .
சூடு பிடிச்சிருச்சி மகேஸ்வரா!
சகல கலா வல்லவன்