அரசியல் கட்சிகள் வரிவிலக்குடன் தொழில் செய்ய அனுமதி தேவை: காடிர் பரிந்துரை

kadirஅரசியல்   கட்சிகள்  தங்கள்  நடவடிக்கைகளுக்கு  சுயமாக   நிதி  தேடிக்கொள்வதற்கு   வசதியாக   தொழில்  செய்ய   அனுமதிக்க   வேண்டும்    என்று    அப்துல்  காடிர்  ஷேக்   பாட்சிர்  முன்மொழிந்திருக்கிறார்.

அதற்கு  அனுமதிக்கப்பட்டால்   கட்சிகள்   அரசியல்     நன்கொடைகளை    நாட  வேண்டிய   அவசியமிருக்காது.

“ஒரு  கட்சியின்கீழ்  பதிவு    செய்யப்படும்   நிறுவனத்துக்கு    வரிவிலக்குக்  கோரும்  உரிமையும்  வழங்கப்பட    வேண்டும்.

“வருமான  வரியே  அவற்றுக்கு  விதிக்கக்  கூடாது   அல்லது   பெயருக்கு  10  விழுக்காடு  வரி  விதிக்கலாம்”,  என்றாரவர்.

பாஸ்  மற்றும்   அரசியல்   நிதியளிப்பு   மீதான  தேசிய    அலோசனைக்  குழு   ஆகியவற்றுடன்   கூட்டாக    நடத்திய   கூட்டமொன்றில்   காடிர்    இப்  பரிந்துரையை   முன்வைத்தார்.