சாபா குனாக்கில் ஆயுதந் தாங்கிய இருவர் சுட்டுக்கொலை

polisஇன்று    அதிகாலை    குனாக்   செம்பனைத்   தோட்டமொன்றில்   போலீசார்  ஆயுதமேந்திய  இரு   குற்றவாளிகளைச்  சுட்டுக்  கொன்றதாக     தேசிய   போலீஸ்  படைத்    தலைவர்    காலிட்  அபு    பக்கார்    கூறினார்.

அச்சம்பவம்   உலு   திங்காயு   தோட்டத்தில்     நடந்ததாக   காலிட்    அவருடைய   டிவிட்டர்   பக்கத்தில்     கூறியிருந்தார்.

“இன்று     காலை    குனாக்,  உலு  திங்காயு   தோட்டத்தில்     ஆயுதமேந்திய    இரு   குற்றவாளிகளை  ஒழித்துக்கட்டியதற்காக    ஐபிகே  குனாக்,  சாபாவுக்குப்   பாராட்டு”,  என்றவர்    டிவிட்டரில்   பதிவிட்டிருந்தார்.

அச்சம்பவம்   குறித்து    விவரிக்க   சாபா   போலீஸ்    ஆணையர்   அப்துல்   ரஷிட்   ஹருன்   இன்று   பிற்பகல்     செய்தியாளர்   கூட்டமொன்றை  நடத்துவார்.